இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா; 24 மணி நேரத்தில் 12,364 பேர் பாதிப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் அங்கு உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,364 பேர் பாதிப்பு அடைந்துள்ளதுடன் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39,72,148 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் 1,052 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 850 ஆக உயர்ந்துள்ளது.