சீன கப்பல் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியா எடுத்த அதிரடி முடிவு!
இலங்கை செல்லும் சீனா உளவு கப்பல் சர்ச்சைகை்கு மத்தியில் இந்தியா, டோர்னியர் (Dornier) உளவு விமானம் ஒன்றை இலங்கை படைகளுக்கு வழங்கவுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாளைய தினம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்த சீன உளவு கப்பலான யுவாங் வாங் 5க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது டோர்னியர் உளவு விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ளது.
இந்த உளவு விமானம் பெரும்பாலும் இந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த விமானம் இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 உளவு விமானம் என்றும் , இந்தியக் கடற்படையால் மின்னணுப் போர்ப் பணிகள், கடல்சார் கண்காணிப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் பிற பணிகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் இந்தயா வழங்கவுள்ள உளவு விமானத்தை, இலங்கை கடல் கண்காணிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.