உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள் ; அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறி தாக்குதல்
அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளலதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 வாரங்களில் மூன்று இனவெறித் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய சிறுமி மீது தாக்குதல் நடந்துள்ளது. கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன். இவர் அயர்லாந்தில் 8 ஆண்டுகளாக தாதியாக பணியாற்றி வருகிறார்.
இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்
அவர் தனது கணவர், 2 குழந்தைகளுடன் தென்கிழக்கு அயர்லாந்தில் உள்ள வாட்டர் போர்டு நகரில் வசித்து வருகிறார்.
அனுபாவின் 6 வயது மகள் நியா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை சில சிறுவர்கள் சரமாரியாகத் தாக்கியதுடன் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டு தப்பிச் சென்றனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என கூறப்படுகின்றது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அனுபா பொலிஸில் முறைப்பாடு செய்த சிலையில் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்லதாக கூறப்படுகின்றது.