சிங்கப்பூரில் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியர்
சிங்கப்பூரில் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வரும் திருப்பதி மோகன்தாஸ் (வயது 41) கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்தியரான அவர் கடந்த மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார்.
பின்னர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றபோது பெண் கூச்சலிட்டதால் மோகன்தாஸ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
சம்பவம் நடந்த 2 நாள் கழித்து மோகன்தாஸ் மீண்டும் அங்கு சென்றுள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின்பேரில் சிங்கப்பூர் பொலிசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து மோகன்தாசுக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.