அமெரிக்காவில் மிகபெரும் பணமோசடியின் ஈடுபட்ட இந்திய வம்சாவளி நபர்!
அமெரிக்காவில் ரூ.23 கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த யோகேசை என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி நபரான 43 வயதான யோகேஷ் பஞ்சோலி.
இவர் அமெரிக்காவில் ஷ்ரிங் ஹோம் கேர் இன்க் என்ற சுகாதார காப்பீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் தனது நிறுவனத்தின் மூலம் சுமார் ரூ.23 கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு அங்குள்ள மிக்சிகன் மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் அவரது குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எனவே யோகேசுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.