இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான தாய் மற்றும் மகளுக்கு நேர்ந்த கதி!
இங்கிலாந்தில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்களாகிய தாய் மற்றும் மகள் குறித்த சில புதிய தகவல்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன.
இம்மாதம் 8ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Great Waldingfield என்னும் இடத்தில், வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என பொலிஸாருக்குத் தகவலளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் அங்கு விரைந்தபோது, ஒரு தாயும் மகளும் உயிரிழந்து கிடந்துள்ளனர். அதே வீட்டில் காயங்களுடன் ஒரு ஆண் சிக்கியுள்ளார். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
தற்போது உயிரிழந்த பெண்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன, கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெயர் ஜில்லு நாஷ் (44). அவரது பெற்றோர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். மற்றொரு பெண், லூயிஸ் நாஷ் (12), அவர் ஜில்லுவின் மகள். அவர் ஆட்டிஸக் குறைபாடு கொண்டவர்.
பிரேதப் பரிசோதனையில், ஜில்லு கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதும், Louise வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. கொலை செய்தவர் என பொலிஸார் கருதும் 46 வயது நபரைக் குறித்த விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
இதை தொடர்ந்து இந்த இரட்டைக் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் யாருக்காவது ஏதாவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.