லண்டனில் மொபைலால் சிக்கிய இந்திய வம்சாவளி நபர்; 22 ஆண்டுகள் சிறை
லண்டனில் விருஜ் படேல் என்ற இந்திய வம்சாவளி நபர், மொபைல் போன் பழுது பார்த்தபோது அவரது பயங்கரமான பாலியல் குற்றங்கள் அம்பலமானதை அடுத்து, 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி விருஜ் படேல் 13 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்புணர்வு செய்தது உட்பட, பல பெண்களை பாலியல் ரீதியாக தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.
குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வீடியோக்கள்
அதேவேளை அவரது சகோதரர் கிஷன் படேல், குழந்தைகள் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 15 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
கிஷன் படேலின் சாதனத்தை பழுது பார்க்கும் பணியின்போது, அதில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வீடியோக்கள் கண்டறியப்பட்டன.
அதில் விருஜ் படேலின் முகம் தெரிந்ததையடுத்து, பொலிசார் விசாரணையைத் தொடங்கினர். சோதனைகளில், இளம்பெண்ணை வன்புணர்வு செய்யும் காட்சிகள் மற்றும் சிறுமியை ரகசியமாக படம்பிடித்த வீடியோக்கள் கிடைத்ததை அடுத்து 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் தகவல் வழங்க முன்வருமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.