அமெரிக்காவிலிருந்து கணவரை நாடு கடத்தக் கோரும் இந்திய மனைவி
தமது கணவர் கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குக் குடியேறியதாகவும் அவரை அங்கிருந்து வெளியேற்றி இந்தியாவுக்குத் திரும்பும்படி உத்தரவிடவேண்டும் என்றும் இந்தியப் பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்,
சமூக ஊடகமான Instagram இல் அமெரிக்கக் குடிநுழைவுத்துறையை இணைத்துத் இந்தியப் பெண் கோரிக்கையைப் பதிவிட்டார். அதில் ,
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக சென்றார்
"என் பெயர் சமன்பிரீத் கவுர், தற்போது நான் இந்தியாவில் வசித்து வருகிறேன். என் கணவர் 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு புகலிடம் கோரி சென்றார். அவர் ஒரு போலி புகலிடம் கோருபவர், ஏனெனில் அவருக்கு இங்கே அவரது சொந்த நாட்டில் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
இப்போது அவர் யாரையாவது திருமணம் செய்து கொண்டார் அல்லது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார் அல்லது நேரடி உறவில் இருக்கிறார், அந்த சூழ்நிலையில் எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் இன்னும் என்னை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.
பணம் சம்பாதிப்பதற்காகவும் குடியுரிமை பெறுவதற்காகவும் அவர் அங்கு சட்டவிரோதமாக சென்றார். எங்களுக்கு 7 வயது மகள் இருக்கிறாள், எங்கள் இருவரையும் கைவிட்டுச் செல்வதற்கு முன்பு அவர் இருமுறை யோசிக்கவில்லை," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் இந்தியாவில் அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பொய் சொல்லிக் கணவர் அமெரிக்காவில் புகலிடம் தேடினார். வேறொருவரை அமெரிக்காவில் மணக்கப்போவதாகவும் அவர் கூறியதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
கணவர் அமெரிக்காவுக்குச் சென்றபோது மனைவியையும் மகளையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல வாக்குறுதி அளித்தார் என்றும், அவர் தமது குடும்பத்தைக் கைவிட்டதால் அவரை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும்படி மனைவி அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.