நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்த இந்திய இளைஞர்; காரில் கண்டெடுக்கப்பட்ட உடமைகள்
இந்திய இளைஞர் ஒருவர் நயாகரா நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் எனும் பகுதியில் வசித்து வந்த 26 வயது இளைஞரான Tathikonda Avinash தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
இதன்போது Avinash எதிர்பாராதவிதமாக நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளார். எனினும் அவருடைய உடல் நீர்வீழ்ச்சியில் மாயமானதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே Avinash-ன் அடையாள அட்டை, மொபைல் போன் மற்றும் உடைகள் உள்ளிட்டவை நயாகரா நீர் வீழ்ச்சியின் அருகே நின்று கொண்டிருந்த காரிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
https://canadamirror.com/article/one-person-dead-another-missing-1627986898