இந்தோனேசியாவில் தொடரும் சோகம்; 11 பேர் பரிதாப பலி
இந்தோனேசியா நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் பலத்த மழையால் மேற்கு ஜாவா மாகாணம் சுமேடங் மாவட்டத்தில் உள்ள சிஹான்ஜிவாங் கிராமத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களை சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. மீட்பு பணிகளின் போது, இன்று 2வது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இதில் மீட்புகுழுவினர் சிலரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.
நிலச்சரிவால் சாலைகள், பாலங்களில் மண் சரிந்து கிடப்பதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீட்பு கருவிகளை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.