மத்திய கிழக்கின் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்திய கிழக்கை ஆட்கொள்ளும் புதிய பதற்ற அலைக்குப் பின்னணியாக, ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஏவுகணைகளை வீசியது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தங்களது வான்வெளிகளை தற்காலிகமாக மூடிவிட்டதாக ப்ளைட்ராடர் Flightradar24 வான் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனம் தனது X-கணக்கில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.
ஈரானின் பதிலடி இஸ்ரேல் ஈரானின் அணு திட்டத்தை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலளிக்கவே, ஈரான் “வெற்றியின் உறுதி” (Operation Promise of Victory) என்ற பெயரில் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியதாக அதன் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏழு ஏவுகணைகளை விட்டு தாக்கியுள்ளது.
அதில், கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய விமானப்படைத் தளமான அல்-உதெய்த் (Al-Udeid) தளத்தை ஏறத்தாழ ஆறு ஏவுகணைகள் குறிவைத்துள்ளன.
மேலும், ஈராக்கில் ஒரு அமெரிக்கத் தளமும் தாக்கப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலாகவே ஈரான் மேற்கொண்டதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அணு வசதி மீது தாக்குதல் நடத்தியதற்குப் பின்னும், அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகக் கூறப்படுவது, மத்திய கிழக்கில் நிலவும் நிலையை மேலும் மோசமாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.