ஆசிய ஊழியர்கள் 24 பேர்களுடன் கப்பலை சிறைபிடித்த ஈரான்
அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்த கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்துள்ள நிலையில், முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமானது இந்த கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல். கடந்த 27ம் திகதி ஈரான் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், கப்பலுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் கப்பலை சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் கூறி ஈரான் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
அந்தக் கப்பலையும் 24 இந்திய ஊழியர்கள் உட்பட்ட அனைவரையும் பத்திரமாக மீட்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் ஈரான் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்த கப்பலானது எங்கள் நாட்டின் கப்பல் மீது மோதியது. இதில் எங்கள் நாட்டைச் சேர்ந்த 2 ஊழியர்கள் காணாமல் போய் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே வளைகுடா கடல் பகுதியில் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.