அணுசக்தி பேச்சுவார்த்தை குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு
அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே தடம் புரளச் செய்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானை தாக்குவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டினார்.
“பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்ற ஈரான் மீதான நெதன்யாகுவின் குற்றவியல் தாக்குதலின் நோக்கம், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தை முறியடிப்பதாகும்,
அதை நாம் அடைய சரியான பாதையில் சென்று கொண்டிருந்தோம்,” என ஈரானிய வெளியுறவு அமைச்சர் திங்கட்கிழமை X தளப்பதிவில் கூறியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “ராஜதந்திரத்தில் உண்மையாக இருந்தால், இந்தப் போரை நிறுத்த ஆர்வமாக இருந்தால், அடுத்த நடவடிக்கைகள் விளைவுக்குரியவை” என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.
“நெதன்யாகு போன்ற ஒருவரை வாயடைக்க வாஷிங்டனில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு தேவை. அது ராஜதந்திரத்திற்குத் திரும்புவதற்கு வழி வகுக்கும்” என்று அவர் கூறினார்.
ஏப்ரல் முதல், ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து ஐந்து சுற்று மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
சனிக்கிழமை, ஓமானின் வெளியுறவு அமைச்சர் ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாகக் கூறினார்.