இஸ்ரேல் - பாலஸ்தீனுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்
இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியது. அப்போதுதான் அமைதியும், ஸ்திரத்தன்மையும் அந்தப் பகுதிகளில் தொடா்ந்து நிலவும் என்றும் இந்தியா குறிப்பிட்டது.
மத்திய கிழக்கு மற்றும் பாலஸ்தீனத்தில் நிலவும் சூழலை விவாதிப்பதற்காக வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ். திருமூா்த்தி ஆற்றிய உரை: வன்முறையை முடிவுக்கு கொண்டு வர உடனடியாக இரு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதேநேரத்தில், பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இரு தரப்பும் தவிா்க்க வேண்டும். காஸா பகுதியில் இருத்து கண்மூடித்தனமாக வீசப்பட்ட ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலுக்கு பலா் பலியாகியுள்ளனா். இந்தியப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளாா். பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா்.
பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். வன்முறை, தாக்குதல், அழிவை ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைக்கும் இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையே உடனடியாக மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும் என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட தொடா் பேச்சுவாா்த்தை அவசியம்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதற்காக மேற்கொள்ளப்படும் ராஜீய ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்துக்கும் இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்றாா்.