இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் ஆரம்பமான சிக்கல் ; மூடப்பட்டது ஹோர்முஸ் நீரிணை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை நிறுத்திவைக்க ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, பெய்ரூட் உட்பட லெபனானில் உள்ள 100க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் பெரும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

போர் நிறுத்தம்
லெபனான் பொதுமக்களின் மரணங்களையும், போர் நிறுத்தம் மீறப்பட்டதையும் காரணம் காட்டி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூட ஈரான் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் சுமார் 20% ஐக் கொண்டு செல்லும் இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதையின் முற்றுகையானது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை மீண்டும் ஒருமுறை கடுமையான அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது.
லெபனான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், போர் நிறுத்தத்திலிருந்து முழுமையாக விலகிக்கொள்வோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.