கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக இன்ஹேலர் உருவாக்கிய இஸ்ரேல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்குப் பதிலாக அவர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு இன்ஹேலரை இஸ்ரேல் கண்டறிந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்ஹேலரை உள்ளிழுப்பது கொரோனா நோய்த்தொற்றை 5 நாட்களுக்குள் குணப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இன்ஹேலரை இஸ்ரேலில் உள்ள ஒரு பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். மருத்துவ பரிசோதனைகளின் போது, பாதிக்கப்பட்ட 30 பேருக்கு இன்ஹேலர் மூலம் மருந்து வழங்கப்பட்டதுடன் அவர்களில் 29 பேர் 3-5 நாட்களுக்குள் முழுமையாக குணப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை வெளிநாட்டு ஊடக செய்திகளின்படி, ஒரு கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நபரை குணப்படுத்த நபரால் இன்ஹேலரை முழுமையாக உள்ளிழுப்பது போதுமானதாகும் என்றும் கொரோனாவுக்கு எதிரான அதன் பாதுகாப்பு 96 சதவீதம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த இன்ஹேலரை பொது சுகாதாரத்திற்காக தேசிய சுகாதார ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.