காசா நகரில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
காஸா நகரில் உள்ள பலஸ்தீனா்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரைவழி நடவடிக்கையை விரிபடுத்த இஸ்ரேல் இராணுவம் தயாராகிவரும் சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா நகரில் சுமாா் 10 இலட்சம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சில இடங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இந்த நகரம் கொடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மவாசி மனிதாபிமான முகாம்களில் கள வைத்தியசாலைகள், குடிநீா் வசதி, உணவு, கூடாரங்கள் வழங்கப்படும் என்றும் ஐ.நா. மற்றும் சா்வதேச அமைப்புகளுடன் உதவிகள் வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக வெளியிட்டுள்ளதாகவும் ஐ.நா. மற்றும் மனிதாபிமான அமைப்புகள் இதில் பங்கேற்கவில்லை என்று ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக செய்தித் தொடா்பாளா் ஒல்கா செரெவ்கோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.