புதிய அமைச்சரவை அறிவித்த ஜப்பான்!
ஜப்பானில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமைச்சரவையை மாற்றியமைத்த பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) புதிய முகங்களோடு அனுபவம் வாய்ந்த பழைய முகங்களையும் சேர்த்திருக்கிறார்.
வெளியுறவு அமைச்சர், நிதி அமைச்சர், அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் ஆகிய பதவிகளில் மாற்றம் இல்லை. சுகாதார அமைச்சர் காத்தொ கட்சுநோபு (Kato Katsunobu) மூன்றாவது முறையாக அந்தப் பதவியில் நீடிக்கிறார்.
தற்காப்பு அமைச்சராக ஹாமாடா யாசுகாஸு (Hamada Yasukazu) திரும்பவும் பொறுப்பேற்றுள்ளார். தற்காப்பு, நிதி, வெளியுறவு அமைச்சு ஆகியவை இப்போதைய நிலவரத்தில் முக்கியமாக இருப்பதால் அவற்றில் பழைய முகங்களே நீடிப்பதாகத் கிஷிடா (Kishita) கூறியுள்ளார்.
அமைச்சர்கள் உட்பட ஜப்பானிய அரசியல்வாதிகள் Unification தேவாலயத்தோடு இருக்கும் தொடர்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அவரது செல்வாக்கு சரிய அந்த அமைப்போடு ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு இருக்கும் தொடர்பு ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. முன்னைய பிரதமர் அபே சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அவருக்கும் அந்தத் தேவாலயத்துக்கும் இருந்த தொடர்பே காரணம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் அவரைச் சுட்ட துப்பாக்கிக்காரன் தன்னுடைய அம்மா அந்தத் தேவாலயத்துக்கு 700,000 வெள்ளிக்கு மேல் நன்கொடை தந்து குடும்பத்தை நொடிக்கச் செய்துவிட்டதாக விசாரணையில் கூறுகின்றனர்.