மியான்மார் தொடர்பில் ஜோ பைடன் அதிரடி உத்தரவு
அமெரிக்கா மியான்மருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன் ராணுவத் தலைமைக்கு நிதி உதவியை நிறுத்தி வைப்பதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
எனினும் னும் சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு நிதியுதவி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி ஆங்சான் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை சிறையில் அடைத்தது. அமெரிக்காவில் மியான்மருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா முடக்கியுள்ளது.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்காவிட்டால், புதிய தடைகளை விதிக்க நேரிடும் என மியான்மர் ராணுவத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.