காபூல் மசூதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்!
காபூல் மசூதியில் நடந்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 50 மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக மசூதியில் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் இன்றைய தினம் (29-04-2022) தொழுகைக்குப் பிறகு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்கானிஸ்தான் தலைநகரின் மேற்கில் உள்ள கலீஃபா சாஹிப் மசூதியில் அதிகாலையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்று உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பெஸ்முல்லா ஹபீப் கூறினார்.
மேலும் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக உள்துறை அமைச்சினால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.