லிபியா தேர்தலில் போட்டியிட கடாபி மகனுக்கு தடை
லிபியாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறைந்த கடாபியின் மகனுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
லிபியாவில் அடுத்த மாதம் 24-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது, இந்த தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதில் மறைந்த முன்னாள் சர்வாதிகாரி கடாபியின் மகனான சயீஃப் அல்-இஸ்லாமின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
கடாபியின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறையை ஏவிவிட்டதாக சயீஃப் மீது குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
இவர் மீது சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு இருப்பதால், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை எதிா்த்து சயீஃப் அல்-இஸ்லாம் மேல்முறையீடு செய்ய முடியும் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.