கனடாவில் திருடிய காரை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்த நபர்... பின்னர் தெரியவந்த உண்மை
கனடாவின் ஒன்ராறியோவில், திருடிய கார் ஒன்றை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்த ஒரு நபரை துரத்திப் பிடித்திருக்கிறார்கள் பொலிசார்.
பின்னர், விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக நடந்த திருட்டுகள் பலவற்றில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதாக பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவர், St-Isidore என்ற இடம் முதல் Vankleek Hill என்ற இடம் வரையில் பல இடங்களில் கைவரிசை காட்டியிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். அந்த நபர் திருடிய கார் மட்டும் ஒன்ராறியோவிலுள்ள Hawkesbury என்ற இடத்தில் திருடப்பட்டுள்ளது.
பொலிசார் அவரது பெயர் மற்றும் வயது போன்ற எந்த விவரங்களையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து Vankleek Hill பகுதியிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றின் ஒரு பகுதி மூடப்பட்ட நிலையில், பின்னர் அது போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது.
பொலிசார் தொடர்ந்து அந்த நபரை விசாரித்து வருகிறார்கள்.