உலகளவில் மக்களை கவர்ந்த முதல் 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியீடு!
மக்களை கவர்ந்த முதல் 100 நகரங்கள் கொண்ட பட்டியல் தொடர்பாக ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த கண்கெடுப்பு பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது.
இதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில், பாரிஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
மேட்ரிட் 2-வது இடத்திலும், டோக்கியோ 3-வது இடத்திலும், ரோம் 4-வது இடத்திலும், மிலன் 5-வது இடத்திலும் உள்ளன.
நியூயார்க் (6), ஆம்ஸ்டர்டாம் (7), சிட்னி (8), சிங்கப்பூர் (9), பார்சிலோனா (10) ஆகிய நகரங்கள் டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகள் ஆகும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் 100 இடங்களில் தலைநகர் டெல்லி மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் டெல்லி 74-வது இடத்தில் உள்ளது. இடத்தில் கெய்ரோ உள்ளது. ஜுஹாய் (சீனா) 99-வது இடத்திலும், ஜெருசலேம் 98-வது இடத்திலும் உள்ளது.