எதிர்வரும் 4 மாதத்திற்கு சூரியனையே பார்க்க முடியாது....எந்த பகுதியில் தெரியுமா?
பூமியின் தென் துருவப் பகுதியான அண்டார்டிகா, லாங் நைட் எனப்படும் நீண்ட இரவில் சென்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அண்டார்டிகா கண்டம் பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய கண்டம் மற்றும் மிகப்பெரிய பனி பாலைவனமாகும். இங்கு மக்கள் வாழ முடியாத சூழல் உள்ளது.
அதனால் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அண்டார்டிகாவில் ஆராய்ச்சிக்காக சென்று தங்குகிறார்கள். தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகா பூமியின் சாய்வு கோணத்தால் வருடத்தில் 4 மாதங்கள் இருளில் மூழ்கும். இந்த நான்கு மாதங்களுக்கு சூரியன் அண்டார்டிகாவில் காணப்படாது என்பதால், இது "லாங் நைட்" என்று அழைக்கப்படுகிறது.
தற்போது அண்டார்டிகாவில் நீண்ட இரவு தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.