பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து! 31 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மாலியின் கெனிபியா பகுதியில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்தாகவும், அதில் 31 உயிரிழந்திருப்பதாகவும், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெனிபியா பகுதியில் உள்ள பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.