வழியை மறித்து நின்ற காருக்குப் பின்னால் ஹாரன் ஒலிக்கச் செய்த பெண்... அதற்குப் பின் நடந்த எதிர்பாராத பயங்கரம்
கனடாவில், வழியை மறித்து காரை நிறுத்தியிருந்த நபரை வழிவிடச் சொல்லி ஹாரனை ஒலிக்கச் செய்தார் ஒரு பெண். அடுத்து நடந்த பயங்கரத்தை அவர் கனவிலும் மறக்கமாட்டார்.
எட்மண்டனைச் சேர்ந்த Jared Eliasson என்பவர் தனது காரில் சென்று வீடு வீடாக செய்தித்தாள் விநியோகித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, சாலையின் வலது புறமாக திரும்பும் பகுதியில் அவர் காரை நிறுத்திவிட்டு செய்தித்தாள் போடச் செல்ல, அவ்வழியே காரில் வந்த ஒரு பெண், Jaredஇன் கார் வழியை மறித்துக்கொண்டிருப்பதைக் கண்டு ஹாரனை ஒலிக்கச் செய்துள்ளார்.
அமைதியாக வந்து காரை நகர்த்தி வழிவிட்ட Jared Eliasson, அந்த பெண்ணின் காரை பின்தொடர்ந்திருக்கிறார்.
காத்திருந்து அந்த பெண் வெளியேறும்போது இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து அந்த பெண்ணின் இரண்டு கைகளையும் அடித்து உடைத்திருக்கிறார் Jared.
Jared கைது செய்யப்பட, வழக்கு நீதிமன்றம் சென்றது. Jaredக்கு மூன்றரையாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தார் Jared.
ஆனால், மேல் முறையீட்டு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துவிடவே, உச்ச நீதிமன்றம் சென்றார் Jared. முதல் முறை வழக்கை விசாரித்த நீதிபதி சரியாகத்தான் தீர்ப்பு வழங்கியுள்ளார் என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், Jaredக்கு வழங்கப்பட்ட மூன்றரையாண்டு சிறைத்தண்டனையை குறைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
Jaredஆல் தாக்கப்பட்ட அந்த பெண், உடலிலும் மனதிலும் அனுபவித்த வேதனை அவரது வாழ்வையே மாற்றக்கூடியதாக இருந்ததாக தங்கள் தீர்ப்பில் எழுதியுள்ளார்கள் நீதிபதிகள்.