மத்திய அமெரிக்காவில் கனடியர் சடலமாக மீட்பு
மத்திய அமெரிக்க நாடான பெலீஸ் (Belize) நாட்டின் கடற்கரையில், அலைகளில் தத்தளித்துக் கொண்டிருந்த விசைப்படகு ஒன்றிலிருந்து கனடாவின் வான்கூவர் நகரைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கனடா மற்றும் பெலீஸ் நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வான்கூவரைச் சேர்ந்தவர் என்பதை அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பெலீஸ் பொலிஸாரும் கடலோர காவற்படையும் இணைந்து இந்த மரணம் குறித்த விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை ஆபத்தான நிலையில் ஒரு படகு கடலில் மிதப்பது குறித்த தகவல் கிடைத்தது.
ஆனால், ஆரம்பத்தில் அது பெலீஸ் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் இருந்தது என பெலீஸ் கடலோர காவற்படை தளபதி கிரிகோரி சோபெரானிஸ் என தெரிவித்துள்ளார்.
குறித்த படகு கடலில் பயணித்த ஒரு உல்லாசக் கப்பலை (Cruise Ship) நெருங்கிய போது, அதிலிருந்த ஒரு பெண் மட்டும் அந்த கப்பலால் பத்திரமாக மீட்கப்பட்டார். எனினும், படகில் இருந்த சடலத்தை மீட்பதில் சிக்கல் நிலவியது என குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு அந்தப் படகு பெலீஸ் கடல் எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து, கடலோர காவற்படையினரால் சடலத்துடன் படகு கரைக்குக் கொண்டு வரப்பட்டது.
பெலீஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சின் தலைமை நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் உஷர் (Francis Usher), இந்த மரணத்தில் குற்றச் செயல்கள் இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சடலத்தை ஆய்வு செய்தபோது அதில் சில 'வெளிப்படையான காயங்கள்' காணப்பட்டன. மேலும் சடலம் சிதைந்த நிலையில் இருந்தது. படகிலிருந்த பெண் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
எனவே, இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது," என அவர் தெரிவித்தார்.
உயிரிழந்த கனடியரின் மகன் தற்போது பெலீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் தனது தந்தையின் உடலை மீண்டும் கனடாவுக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.