மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருக்கு 31 ஆண்டு சிறை தண்டனை
நவம்பர் 26, 2008 அன்று கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயங்கர குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாகிஸ்தானில் 166 பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் ஹபீஸ் சயீத். அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜமாத்-உத்-தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள லாகூர் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயீத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல், ஹபீஸ் சயீத்தின் சொத்துகளையும் முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹபீஸ் சயீத் கட்டிய மசூதி மற்றும் மதரஸாவை அரசு கையகப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹபீஸ் சயீத்துக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.