ரொறன்ரோவில் நடுங்க வைக்கும் சம்பவம்: பொலிசில் சிக்கிய இருவர்
ரொறன்ரோவின் Ashbridges Bay Park பகுதியில் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நிலையில், பொலிசார் இருவரை கைது செய்துள்ளனர்.
Ashbridges Bay Park பகுதியில் சனிக்கிழமை இரவு சுமார் 9.20 மணியளவில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து லேக் ஷோர் பவுல்வர்டு மற்றும் காக்ஸ்வெல் அவென்யூ அருகே அவசர மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த ரொறன்ரோ அவசர மருத்துவ உதவிக்குழுவினர், பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தில்லை எனவும் ஆனால் தீவிர சிகிச்சை தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார், சம்பவயிடத்தில் இருந்தே இருவரை கைது செய்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிட பொலிஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.