என்னோடு வா... வான்கூவரில் 14 வயது சிறுமியை கடத்த முயன்ற நபர்: வெளிவரும் முழு தகவல்
வான்கூவர் பாடசாலைக்கு வெளியே, 14 வயது சிறுமியை கடத்த முயன்ற நபர் தொடர்பில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.
கடந்த 7ம் திகதி கில்லர்னி மேல்நிலைப் பள்ளிக்கு வெளியே குறித்த சிறுமி கிழக்கு 49 வது அவென்யூவில் மாலை 3 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றை கடந்து செல்கையில், அந்த வாகனத்தில் இருந்த சாரதி, சிறுமியை மிரட்டி கடத்த முயன்றுள்ளார்.
ஆனால் சுதாரித்துக்கொண்ட சிறுமி, அங்கிருந்து தப்பிக்க முயல, அந்த நபர் வாகனத்துடன் தொடர்ந்து வந்து ஆபாசமாக திட்டியுள்ளார்.
இதனையடுத்து பயந்து போன சிறுமி, பாதுகாப்பான பகுதிக்கு சென்று, தாம் ஆபத்தில் இருப்பதை தமக்கு நெருக்கமான ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியை மிரட்டி கடத்திச் செல்ல முயன்ற நபருக்கு 60 வயது இருக்கலாம் எனவும், அவரது வாகனம் கடும் சிவப்பு நிறத்தில் இருந்தது எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நபர் உடனடியாக பொலிசாரை அணுகி விளக்கமளிக்க வேண்டும் எனவும்,
அந்த நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் மக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.