35 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி: அமெரிக்காவில் கைது!
கனடாவின் ஹேமில்டன் நகரக் காவல்துறையால் கடந்த 35 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த 64 வயது நபர் ஒருவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சார்லஸ் பீட்டர் பில்லோன் என்ற 64 வயது நபர், கலிபோர்னியாவின் சாண்டா குரூஸ் பகுதியில் பிடிபட்டதாக ஆகஸ்ட் 4 அன்று குடிவர மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை உறுதிப்படுத்தியது.
இவர் 1991 ஆம் ஆண்டு முதல் கனடாவில் இருந்து தப்பி ஓடிய தலைமறைவுக் குற்றவாளியாக இருந்துவந்துள்ளார். பில்லோன் மீது கனடா நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

2 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 2 பாலியல் குறுக்கீடு சிறுவர் பாலியல் அத்துமீறல்) வழக்குகள் ஆகியவை நிலுவையில் உள்ளன. குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் தவிர, திருட்டுச் சொத்துக்களை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலும் இவர் தண்டனை பெற்றவர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பில்லோன் அமெரிக்க குடிவரவுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; அவரை கனடாவுக்குத் நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து ஹேமில்டன் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பில்லோனின் வழக்கு தொடர்பாகக் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். இருப்பினும், தற்போதைக்கு முறையான ஒப்படைப்பு நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் காவல்துறை மின்னஞ்சல் மூலம் விளக்கமளித்துள்ளது.