ரொறன்ரோ ரயிலில் கொள்ளையிட்ட நபரைத் தேடும் பொலிஸார்
ரொறன்ரோ ரயிலில் ஆயுத முனையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடந்த 18ம் திகதி எக்லிங்டன் கோ ரயிலில் ஏறி ஆயுத முனையில் கொள்ளையிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அருகாமையில் அமர்ந்திருந்த ஆண் பயணி ஒருவரின் அலைபேசியை கேட்டு கத்தியை காண்பித்து மிரட்டியுள்ளார்.
ஐந்து அடி ஏழு அங்குலம் மதிக்கத்தக்க கறுப்பினத்தவர் ஒருவரே இவ்வாறு ஆயுத முனையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேக நபர் பற்றிய விபரங்களையும் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் பற்றிய விபரங்கள் இருந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.