வான்கூவரில் துணிகர சம்பவம்... மொத்தமாக எரிந்த வாகனம்: மீட்கப்பட்ட ஆணின் சடலம்
தெற்கு வான்கூவரில் வெள்ளிக்கிழமை இரவு வாகனம் ஒன்றில் துப்பாக்கி கூண்டு பாயந்த நிலையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட நபர் 44 வயதான Alvis Anjesh Singh என அடையாளம் காணப்பட்டுள்ளது. கென்ட் அவென்யூ மற்றும் கெர் தெருவுக்கு அருகில் இரவு சுமார் 10 மணியளவில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
இதனிடையே, செக்ஸ்மித் தொடக்கப்பள்ளிக்கு அருகில் எரிந்து சேதமான நிலையில் இன்னொரு வாகனமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வாகனமானது துப்பாக்கிச் சூடு தொடர்பானது என்று நம்புவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வன்முறை கும்பல் மோதலில் இந்த ஆண்டில் இதுவரை நகரில் நடக்கும் 8-வது கொலை என பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கொல்லப்பட்டவர் பொலிசாரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து வந்தவர்களில் ஒருவர் என தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, இது திட்டமிடப்பட்ட தாக்குதல் சம்பவம் எனவும், தப்பிச் சென்ற வாகனத்தில் மூவர் இருந்துள்ளதாகவும்,
அவர்களுக்கும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக நம்புவதாகவும் பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.