விவசாயிகள் போராட்டத்தை முடக்க டெல்லி பொலிஸாரின் மோசமான செயல்; பலரும் கண்டனம்
டெல்லி உத்தரபிரதேச எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து முன்னேறுவதை தடுக்க சாலையில் ஆணிகளை டெல்லி பொலிஸார் பதித்துள்ள நிலையில் அதற்கு பலரும் கண்டனக்களை கூறிவருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் 12 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பாக நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறையாக மாறியது. இதில் விவசாயி ஒருவர் உயிரிந்தார்.
இந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காணாமல் போயுள்ளதாக பஞ்சாப் மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.
எனினும் நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.