குறைப்பிரசவ குழந்தைகள் ஆய்வில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!
ஐ.நா குழந்தைகள் நிதியம் (UNICEF), உலக சுகாதார அமைப்பு மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (BMNCH) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வை ஒன்றை நடத்தின.
இந்த ஆய்வில் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன.
அதாவது, 2020 இல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 1.34 கோடி. இதில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துவிட்டன.
கிரீஸ் (11.6%) மற்றும் அமெரிக்கா (10%) ஆகிய அதிக தனிநபர் வருவாய் கொண்ட நாடுகளிலும் குறை பிரசவம் அதிக அளவில் பதிவாகி உள்ளது.
மேலும், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் 45% பேர் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் போர், காலநிலை மாற்றம், கொரோனா வைரஸ் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர் ஆகிய 4 முக்கிய காரணிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிக அளவில் பாதித்துள்ளன.
குறிப்பாக, காலநிலை மாற்றமும் பெரிதும் தாக்கம் செலுத்தியுள்ளது.
காலநிலை மாற்றம் கர்ப்பிணிகள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது.
காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பது தெரியவந்துள்ளது.