கனடாவில் குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு கொரோனாவால் நேர்ந்த அவலம்!
கனடாவில் பிறநாட்டு மக்களின் குடியுரிமை விண்ணப்பத்திற்கான பதில் கொரோனா காரணமாக தாமதமாகி வருவதால் பலர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கனடாவில் வசிக்கும் பிற நாட்டு மக்கள் பலரும் தங்கள் குடியுரிமை விண்ணப்பத்திற்கான பதிலை எதிர்நோக்கி நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். அதாவது கடந்த 2020 ஆம் வருடம் மீனாட்சி என்பவர் கனடா குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளார். அவருக்கான தேர்வின் திகதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 11ஆம் தேதி உலகையே புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் கொரோனா ஆரம்பித்ததை அடுத்து குடியுரிமை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
அதன் பின்பு நவம்பர் மாதத்தில் தான் இணையதளம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் தேர்விற்காக 87,000 பேர் தான் காத்திருந்துள்ளனர். எனினும் இந்த வருடம் 1,02,000 பேர் உள்ளனர். இதனால் பணி தேடுவதில் தொடங்கி பல பிரச்சனைகளை வருடக்கணக்கில் சந்தித்து வருவதால், எரிச்சலடைந்த மீனாக்ஷி விண்ணப்பத்தை வாபஸ் பெறப்போகும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவெளை புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marco Mendicino குடியுரிமை பெற நினைப்பவர்கள் நம்பிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்திருக்கிறார்.