முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீட்டில் பாரிய மனிதப்புதைகுழி; அதிர்ச்சியில் அதிகாரிகள்
லத்தீன் அமெரிக்க நாடான எல்சல்வடோரில் முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீட்டின் பின்புறத்தில் பாரிய மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் அங்கு குறைந்தது அங்கு 40 மனித சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவை பெண்களுடையவை என கூறப்படுகின்றது.
புதைகுழியில் அனைத்து உடல்களையும் மீட்பதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்படும் அதேவேளை , இந்த கண்டுபிடிப்பு ஒரு தசாப்தத்தில் செயல்படும் ஒரு ரகசிய கொலை வளையத்தை வெளிப்படுத்துவதாகவும் பொலிசார் நம்புகின்றனர். லத்தீன் அமெரிக்காவில் பெண்ணியக்கொலைக்கான மிக உயர்ந்த விகிதத்தை எல்சல்வடோர் கொண்டிருக்கிறது.
பெண்கள் அல்லது சிறுமிகள் பாலியல் வன்முறையின் பின் கொலை செய்யப்படுவது அங்கு வழக்கமானது. தலைநகர் சன் சல்வடோர் நகரில் உள்ள பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஹிஹோ எர்னிஷ்டோ ஒசோரியா ஷாவீஷ்(Hugo Ernesto Osorio Shavish). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் இருந்து ஓய்வு பெற்று சன் சல்வடோர் நகரில் இருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாஹல்ஷுபா என்ற பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஹ்யூகோ எர்னஸ்டோ ஒசோரியோ சாவேஸ்(Hugo Ernesto Osorio Shavish) பணியாற்றிய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 2015 ஆம் ஆண்டு முதல் பலர் மாயமாகியுள்ளனர். இது தொடர்பாக ஹிஹோ மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 51 வயதான ஹ்யூகோ எர்னஸ்டோ ஒசோரியோ சாவேஸ், 57 வயதான ஒரு பெண்ணையும் அவரது 26 வயது மகளையும் கொலை செய்ததற்காக இந்த மாதம் சல்ச்சுவாபா நகரில் தடுத்து வைக்கப்பட்டார்.
அதற்கு முன்னதாக பாலியல் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்ட முன்னாள் அதிகாரி, இந்த ஜோடியைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தடயவியல் குழுக்கள் தலைநகர் சான் சால்வடாரிலிருந்து வடக்கே சுமார் 48 மைல் தொலைவில் அவரது வீட்டில் தேடியபோது, உடல்கள் அடங்கிய குறைந்தது ஏழு குழிகளைக் கண்டுபிடித்தனர், அவற்றில் சில இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டிருக்கலாம். இந்த கண்டுபிடிப்பு ஒரு கொலை வளையம் இருப்பதை ஒரு தசாப்த காலமாக நீடித்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை, கல்லறைகளில் ஒன்றிலிருந்து எட்டு சடலங்கள் மீட்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை தீர்மானிக்க டி.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதுவரை குறைந்தது 24 பேரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த வீட்டிற்கு வெளியே கூடியிருந்தார்கள். முன்னாள் காவல்துறையினர், முன்னாள் வீரர்கள் உட்பட குறைந்தது 10 பேர் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக எல்சல்வடோரின் தேசிய பொலிஸ் இயக்குனர் மொரிசியோ அரியாசா சிகாஸ் தெரிவித்தார்.
அத்துடன் ஒசோரியோ சாவேஸ் ஒரு தசாப்த காலமாக மக்களைக் கொன்றிருக்கலாம் என்று அவர் குற்றம் சாட்டினார். “அவர் சமூக ஊடகங்களில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து அவர்களை அமெரிக்க கனவுடன் கவர்ந்திழுத்தார்“ என்று அவர் எங்களிடம் கூறினார் என தெரிவித்தார். இதேவேளை இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.