தன்பாலின ஈர்ப்பாளர்கள் விடுதியில் கொடூர சம்பவம்: இரத்தவெள்ளத்தில் சரிந்த பலர்
கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் விடுதியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியை விடுதியில் இருந்த மக்களே சுற்றிவளைத்து கைது செய்ய உதவியதாக கூறப்படுகிறது.
நள்ளிரவுக்கு மேல் Club Q தன்பாலின ஈர்ப்பாளர்கள் விடுதியில் இந்த கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 911 இலக்கத்திற்கு அழைப்பு விடுத்த பலர் உதவிக்கு கோரியுள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
தாக்குதல்தாரி இராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படுகிறது, ஆனால் குறித்த தகவலானது உறுதி செய்யப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே பின்னணி தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.