பிரான்சில் இடம்பெற்ற பாரிய கலவரம்...பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு
பிரான்ஸ் நாட்டின் பாரிசில் அடங்கிய கலவரம் மீண்டும் குவாதுலூப்பில் (Guadeloupe) மிகப்பெரும் போராட்டமாக மாறி தற்போது கலவரமாக உருவெடுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி மற்றும் கட்டாய சுகாதார பத்திரம் போன்றவற்றை எதிர்த்து இடம்பெற்ற போராட்டமே மாபெரும் கலவரமாக மாறியது. இதனையடுத்து வைத்தியலாசாலைகளுக்கு செல்லும் பாதைகள் முடக்கப்பட்டு, வாகனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு தீ வைக்கப்பட்டு மாபெரும் கலவரமாக மாறியது.
இதனைத் தடுக்கச் சென்ற 5 ஜோந்தார்மினர் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக குவாதிலுப்பின் மாகாண ஆணையர், நேற்று இரவிலிருந்த ஊரடங்குச் சட்டத்தினை அறிவித்துள்ளார்.
வன்முறைகள் பொதுவாக இரவில் நடப்பதால், மாலை 6 மணியிலிருந்து காலை 5 மணிவரை ஊடரங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதைகள் முடக்கப்பட்டுள்ளதால் பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஊரடங்கானது எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.