கேக் வாங்குவதற்காக ஹெலிகொப்டரில் வந்து இறங்கிய பெண்... சிக்கலில் பைலட்
கனடாவிலுள்ள Tisdale என்ற நகரின் மேயர் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பள்ளி ஒன்றின் பார்க்கிங் ஏரியாவில் ஹெலிகொப்டர் ஒன்று வந்து இறங்கியதைக் கவனித்துள்ளார்.
ஏதோ பிரச்சினை போலும், யாரையோ மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அந்த ஹெலிகொப்டர் அங்கு இறக்கப்பட்டிருக்கலாம் என அவர் நினைத்துள்ளார்.
ஆனால், அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ஹெலிகொப்டரிலிருந்து இறங்கிய ஒரு பெண் சாலையைக் கடந்து பேக்கரி ஒன்றிற்குள் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அவர் வெளியே வர, அவரது கையில் ஒரு ஐஸ்கிரீம் கேக் இருந்துள்ளது. ஆக, ஒரு கேக் வாங்குவதற்காகத்தான் அந்த ஹெலிகொப்டர் அந்த பள்ளியின் பார்க்கிங் ஏரியாவில் இறக்கப்பட்டது என்பது தெரியவரவே, மேயர் கோபமடைந்துள்ளார்.
ஹெலிகொப்டர் ஒன்றை ஆபத்தான வகையில் பயன்படுத்தியதாக பொலிசார் அந்த ஹெலிகொப்டரின் பைலட்டான 34 வயது நபர் மீது குற்றம் சாட்டியுள்ளார்கள். அவர், அடுத்த மாதம் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.