மியான்மரில் ராணுவ ஆட்சியை தோல்வியுறச் செய்ய வேண்டும்; அன்டோனியோ குட்ரெஸ் வலியுறுத்தல்
ஐ.நா பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்ரெஸ் உலக சமூகத்தை மியான்மரின் இராணுவ ஆட்சி கவிழ்ப்பை தோல்வியுறச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். வாஷிங்டன் போஸ்டுடனான ஒரு ஆன்லைன் கலந்துரையாடலில், குட்ரெஸ் தேர்தல்களை மாற்றியமைப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார். ]
மேலும் இது நாட்டை ஆட்சி செய்வதற்கான வழி அல்ல என்பதை புரிந்து கொள்ள சதித் திட்டத்தில் ஈடுபட்ட ராணுவத் தலைவர்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பு உத்தரவு மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துடன் இந்த விஷயத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் ஒற்றுமை இருக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.
மியான்மரின் இராணுவம் கடந்த திங்களன்று அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன் ஒரு ஆண்டுக்கு அவசரகால நிலையை அறிவித்து, மியான்மர் மக்கள் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட் ஆகியோரை கைது செய்தது.
நவம்பர் 2020 தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் தேசிய ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கிற்கும் ராணுவத்திற்கும் இடையே பல நாட்கள் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரிய தேர்தல் மோசடி என்று குற்றம் சாட்டி இராணுவம் முடிவுகளை ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் ஆட்சி கவிழ்ப்பு தோல்வியுறுவதை உறுதிப்படுத்த மியான்மருக்கு போதுமான அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகத்தின் அனைத்து முக்கிய நாடுகளையும் அணிதிரட்ட ஐ.நா எல்லாவற்றையும் செய்யும் என்று குட்ரெஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே மியான்மரில் இராணுவத்தினரால் ஆங் சான் சூகி மற்றும் அதிபர் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள பல உள்ளூர் தலைவர்களையும் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.