சோமாலியாவில் உணவின்றி தவிக்கும் பல லட்ச மக்கள் - ஐ.நா தகவல்
சோமாலியாவில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவு மற்றும் குடிநீரின்றி தவிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
சோமாலிய நாட்டில் தொடர்ந்து நான்காவது பருவமாக போதிய அளவு மழை வீழ்ச்சி இல்லையென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் உணவு, குடிநீர், தங்கள் கால்நடைகளுக்கான உணவு ஆகியவை இல்லாமல் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.
அடுத்த ஆண்டு, சுமார் 80 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது.
நாட்டில் கடந்த மூன்று தசாப்தமாக உள்நாட்டு யுத்தங்களை சந்தித்து வரும் மக்கள் தற்போது வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவற்றை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.