கிறிஸ்துமஸ் நாளிலும் காசாவில் நிகழும் அவலம்; கண்ணீர் விடும் மக்கள்
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தம்னது தாக்குதலை மேற்கொண்டுவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (24) பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது.
தெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உளள் மகாஜி அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இஸ்ரெலின் இந்த தாக்குதலில் குறைந்தது 60-க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் காசா மக்கள் கண்ணீருடன் கிறிஸ்மஸ் தினத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியயதில் 1200 பேர் கொல்லப்பட்டதுடன், , 240 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இதுவரை 20,400 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், உலக நாடுகள் யுத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றன.