பிரிட்டிஷ் கொலம்பியாவில் நண்பருடன் மலையேற சென்றவருக்கு ஏற்பட்ட துயரம்
வடக்கு வான்கூவரில் மலையேற சென்று மாயமான நபர் பெரும் போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Fromme சிகரம் அருகே சனிக்கிழமை மதியம் அவர் மாயமான பகுதியிலேயே மீட்புக்குழுவினர் அவரை சடலமாக மீட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு செங்குத்தான நிலப்பரப்பில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பகல் 7.30 மணியளவில், அந்த நபரும் நண்பர் ஒருவரும் மலையேற சென்றுள்ளனர். ஆனால் ஒருகட்டத்தில் கென்னடி அருவி அருகாமையில் இருவரும் தனித்து விடப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நண்பரை தேடியும் சிக்காத நிலையில், அந்த நபர் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார். தற்போது சடலமாக மீட்கப்பட்ட நபர் மலையேறுவதை நிறுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே வெள்ளிக்கிழமை இரவாகியும் குடியிருப்பு திரும்பாதது கண்டு அவரது மனைவி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து மூவர் கொண்ட மீட்புக் குழு ஒன்று நள்ளிரவு 2 மணி வரை ஹெலிகொப்டர் கண்காணிப்பில் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.
தொடர்ந்து 5.30 மணிக்கு மேலதிக மீட்புக்குழுக்கள் களமிறங்கியுள்ளனர். இறுதியில் அந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.