கனடாவுக்கு வந்து சென்றவருக்கு குரங்கு அம்மை நோய்: உறுதி செய்த அதிகாரிகள்
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் கனடாவுக்குப் பயணம் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை மாசசூசெட்ஸ் மாகண நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளதுடன், ஐரோப்பாவில் தற்போது சிறிய எண்ணிக்கையில் பரவலை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை நோய்க்கும் தொடர்புள்ளதா என சுகாதார நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருறார்கள்.
குரங்கு அம்மை நோய் ஆபிரிக்க நாடுகளில் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்ட நிலையில், அமெரிக்காவிலும் ஒன்றிரண்டு பேர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இந்த நாடுகளில் பயணப்பட்ட நபர்களுக்கு மட்டுமே பின்னர் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. மேலும், பிரித்தானியா, போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இந்த மாதத்தில் ஒன்றிரண்டு நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியா மற்றும் கனடா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பில் கலந்தாலோசிக்க இருப்பதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மாசசூசெட்ஸ் விவகாரம் தொடர்பில் தற்போது வரையில் பிரித்தானியாவுடன் தொடர்பில்லை என்றே தெரிய வந்துள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் மாசசூசெட்ஸ் நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறிவருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்படுவது இந்த ஆண்டில் இது முதல் முறை எனவும்,
கடந்த ஆண்டு நைஜீரியாவுக்குச் சென்று திரும்பிய இருவர் டெக்சாஸ் மற்றும் மேரிலாண்ட் பகுதியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.