கனடாவில் 20 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புக்கள்
கனடாவில் கோவிட்19 பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 20ஆயிரத்து 32பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 78ஆயிரத்து 972பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 924பேர் பாதிக்கப்பட்டதோடு 90பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 53ஆயிரத்து 281பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 830பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஏழு இலட்சத்து ஐந்தாயிரத்து 659பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.