மொரோக்கோ வாழ் கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
மொரோக்கோ வாழ் கனடியர்கள், கனடிய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மொரோக்காவில் இடம்பெற்ற பாரிய பூமியதிர்ச்சியில் காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாரிய பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாக ஜோலி தெரிவித்துள்ளார்.
மொரோக்காவில் உள்ள கனடியர்கள் உதவி தேவைப்பட்டால் அரசாங்கத்துடன், தூதரகம் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்.
பூமியதிர்வு ஏற்பட்ட போது மொரோக்காவில் இருந்த கனடியர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை கனடா ஆரம்பித்துள்ளது.