இரத்தம் வழிய காபி கடைக்குள் நுழைந்த நபர்: கனடாவில் காலையில் நடந்த துயரம்
வான்கூவரில் உள்ள நியூ வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் காபி கடை ஒன்றில் இரத்தம் வழிய நுழைந்த நபர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது இருவரை கைது செய்துள்ளதுடன், 31 வயதான ரியான் கிராஸ்லி என்பவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பகல் சுமார் 6.30 மணியளவில் நியூ வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ள காபி கடை ஒன்றில் இரத்தம் வழிய நுழைந்துள்ளார் 51 வயதான Robert Powshuk.
இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராஸ்லி மற்றும் Powshuk ஆகியோர் நியூ வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், ஆனால் இருவரும் நன்கு அறிமுகமானவர்களா என்பது தெரியவில்லை எனவும், கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.