அணு ஆயுதத்தை தயாரிக்க மீண்டும் முயற்சிக்க கூடாது ; ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்க ஈரான் மீண்டும் முயற்சிக்க கூடாது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜே.டி. வான்ஸ், "ஈரானின் அணு நிலையங்கள் மீதான எங்களது தாக்குதல், யுரேனியத்தை புதைப்பதை இலக்காக கொண்டு இருந்தது.
அணு ஆயுதத்தை உருவாக்க விரும்பினால்..
யுரேனியம் புதைக்கப்பட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஈரானின் யுரேனியம் கையிருப்பை அகற்றவும், செறிவூட்டப்பட்ட எரி பொருளை அணு ஆயுதமாக மாற்றும் ஈரானின் திறனை அழிக்கவும் அமெரிக்கா விரும்பியது.
அதன்படி அமெரிக்கா தாக்கிய 3 செறிவூட்டல் நிலையங்களுக்கு அடியில் ஈரானின் யுரேனியம் கையிருப்பு புதைந்து போயிருக்கலாம். நாங்கள் ஈரானுடன் போரில் ஈடுபடவில்லை. ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் போரில் ஈடுபட்டுள்ளோம்.
அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சிகளை கணிசமாக தாமதப்படுத்தியுள்ளன. அதுதான் தாக்குதலின் குறிக்கோளாக இருந்தது. அதை நிறைவேற்றி உள்ளோம்.
ஈரான் எதிர்காலத்தில் அணு ஆயுதத்தை உருவாக்க விரும்பினால் அவர்கள் மீண்டும் மிகவும் சக்திவாய்ந்த அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.