மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் நேட்டோ; ரஷ்யா எச்சரிக்கை
உக்ரேனுக்கு நேட்டோ ஆயுதங்களை அனுப்புவது, போருக்குச் சமம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சர்கே லாவ்ரோவ் (Sergeĭ Viktorovich Lavrov) கூறியுள்ளார்.
உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் நேட்டோ கூட்டணி அடிப்படையில் ரஷ்யா மீது போர் தொடுத்திருக்கிறதாகவும் அவர் கூறினார். உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவது பற்றி ஏற்கனவே ரஷ்யா எச்சரித்திருக்கிறது.
அதேவேளை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), ரஷ்யா இந்தப் போரில் வெல்ல முடியாது என அறிவித்திருக்கிறார்.
அத்துடன் ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான ரஷ்யத் துணைத்தூதர் டிமிட்டிரி போலியான்ஸ்கி (Dmitry Polyansky) உக்ரேனுடன் சண்டைநிறுத்தம் செய்துகொள்வதில் அர்த்தம் இல்லை என்றும், உக்ரேன் ரஷ்யாவை மட்டம்தட்டவே அத்தகைய சண்டை நிறுத்தத்தைப் பயன்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார்.
அமெரிக்கா உக்ரேனுக்குப் புதிய தூதராக பிரிஜட் பிரிங்க்கை (Bridget Brink) அறிவித்த பிறகு புதிய எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.